Wednesday, April 25, 2012

உட்கார்ந்திருந்தால் 3 ஆண்டில் உயிருக்கு ஆபத்து

சிட்னி : நீண்ட காலம் வாழ ஆசையா... இதை உட்கார்ந்து படித்து கொண்டிருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள். ஆம். ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று மிரட்டுகிறது ஒரு ஆய்வு முடிவு. ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொதுநல மருத்துவ பிரிவு பேராசிரியர் ஹைட் வான் டெர் பிளாஜ். இவரது தலைமையில் ஒரு குழு நடத்திய ஆய்வில் 2 லட்சம் பேர் பங்கேற்றனர். அதன் அறிக்கை ஏஐஎம் என்ற மருத்துவ இதழில் வெளியானது. அதில் இடம்பெற்ற விவரங்கள் :

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. பருமன், டயபடீஸ் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு குறைவாக உட்கார்ந்தே இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், 11 மணி நேரத்திற்கு அதிகமான நேரம் உட்கார்ந்து இருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.

2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட உடல் உழைப்பு, எடை, உடல் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் துல்லியமாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வது, நீண்ட நடைபயிற்சி ஆகியவையும் அவசியம்தான். ஆனால், அவற்றை விட மிக முக்கியமானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காராமல் இருப்பது. உட்கார்ந்தே இருந்தால் பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும். 

அலுவலக நேரத்தில் எத்தனை முறை முடியுமோ 20 முதல் 30 வினாடிகள் வரை எழுந்து நிற்கலாம். போன் பேசும் போது நிற்கலாம். லிப்ட், எஸ்கலேட்டரை தவிர்த்து படிகளில் ஏறலாம். இமெயில் , இன்டர்காம் தகவல் பரிமாற்றம் தவிர்த்து நேரில் சென்று பார்க்கலாம். ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து சில நிமிடங்கள் நடக்கலாம். குறைந்தபட்சம் உட்கார்ந்த பொசிஷனை மாற்றி தோள்பட்டையை அசைத்து, நீண்ட மூச்சிழுத்து விட்டு தசைகள் அழுத்தத்தை ரிலாக்ஸ் செய்யலாம்.
இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

* 45 வயதுள்ள 2 லட்சம் பேரிடம் 2006,10 வரை 5 ஆண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
* ஒரு நாளில் 3 மணி நேரம் வரை உட்கார்ந்திருப்பவரைவிட 6 மணி நேரம் உட்கார்ந்திருப்பவர் 15 ஆண்டுகளுக்குள் இறக்க நேரிடலாம்.
* பணி நேரம் மட்டுமின்றி ஓய்வை சேர்த்து ஒருநாளில் 90 சதவீத நேரத்தை பெரும்பாலோர் உட்கார்ந்தே செலவிடுகின்றனர். இது ஆபத்தானது.

- நன்றி தினகரன் நாளிதழ் 

Thursday, April 12, 2012

கே எப் சி யில் நடக்கும் கொடூரம்


   கே எப் சி.KFC (Kentucky Fried Chicken) நாம் எல்லோராலும் நன்கு அறியப்படும் ஒரு பொழுதுபோக்கு உண்டிச்சாலை ஆகும். கசாப்பு கடைகளில் கோழி கறிகளை வாங்கி வீட்டில் சமைத்து உண்டோம் ஒரு காலத்தில், ஆனால் இப்போது சிக்கன் என்றாலே கே எப் சி என்றாகிவிட்டது. மேலும் அங்கு சுவையும் அருமையாக இருக்கிறதாம்.

   நாம் அந்த சுவையான சிக்கனை சுவைத்து உண்கிறோம், ஆனால் அந்த சுவையான சிக்கனை கே எப் சி எப்படி தயரிக்கிராகள் என்று யாருக்கும் தெரியாது. கசாப்பு கடைகளில் கூட கோழிகளை ஒரு வித மனிதாபிமானத்தோடு நடந்துக்கொள்வார்கள் ஆனால் கே எப் சி அப்படி ஒரு வார்த்தை இருக்கிறதா என்று கேட்ப்பார்கள் போல.

   எண்ணிக்கையின்றி சிறு சிறு கோழி குஞ்சிகளின் அலகுகளை இயந்திரத்தின் மூலம் உடைத்து விடுகிறார்கள் காரணம் அப்போதுதான் அவைகள் அதிகாமாக தீனிகளை உண்ணும்.

   பிறகு அக்கோழி குஞ்சிகளை எல்லாம் ஒரே இடத்தில் அடைகிறார்கள், அங்கு அவைகளால் சுற்றித்திரிய கூட முடியாது. மேலும் குஞ்சிகள் கொலு கொலுவென்று வலர எதோ ஒரு தீவனத்தை அவைகளுக்கு கொடுக்கிறார்கள். அத்தீவனத்தை உண்டு வளரும் குஞ்சிகள் தங்கள் இயல்பான இடையை விட அதிகமான இடையை கொண்ட கொலு கொலு கோழியாக வளருகின்றன. அந்த கொலு கொலு கோழிகள் தங்கள் அதிக இடை காரணத்தால் நடக்க கூட முடியாமல் கஷ்டப்படுகின்றன.

   முழுமையான வளர்ச்சி அடைந்த கோழிகளை தொழிற்சாலைக்குள் அவைகளை சுவையான சிக்கெனாக மாற்றுகிறார்கள். இங்கு இயந்திரத்தின் மூலம் ரோமத்தை பிரிக்கிறார்கள் கோழிகள் உயிருடன் இருக்கும் நிலையில்.  பிறகு சுழற்றும் மெல்லிய தகுடுகளின் மூலம் வரிசைகளில் வரும் கோழிகளை இரக்கமின்றி கொள்கிறார்கள். இத்தனை கொடுமைகலுக்கு பின்னரே அவற்றை சுவையான சிக்கன்களாக நமக்கு பறிமாறுகிறார்கள்.

   என் நண்பர்கள் மூலம் கே எப் சி யில் சிக்கன் சுவையாக இருக்குமென்று அறிந்து அதை உண்ண வேண்டும் என்ற  ஆசை இருந்தது ஆனால் கீழே இருக்கும் காட்சிகளை கண்ட பிறகு அந்த ஆசையானது அடியோடு அழிந்து விட்டது.






இன்னும் இது போன்ற பல காட்சிகள் நமக்கு தெரியாமல் இருக்கின்றன.

Wednesday, April 11, 2012

ஆய கலைகள் அறுபத்து நான்கு

   'நாலு வேதம், ஆறு சாத்திரம், பதினெண் புராணம், அறுபத்து நான்கு கலைஞானம்' என்பது பழந்தமிழ் இலக்கியப் பாகுபாடாகும். பின்னாளில் இவை பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கி வருகின்றன.

உதாரணமாக ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை- தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே இருப்பள் இங்கு வாராதிடர். -கம்பர்.

   'அறுபத்து நான்கு கலை' என்னும் பெயர் தமிழாதலாலும், அறுபத்து நான்காக வகுக்கப்பட்ட கலைகள் அனையவும் தமிழர்க்கும் உரியனவாதலாலும், தமிழ்க்கலைகள் ஆரியக் கலைகட்குக் காலத்தால் முந்தியனவாதலாலும், அறுபத்து நான்கு கலைப்பட்டி இங்குத் தரப்பட்டுள்ளது.

   அந்த அறுபத்துநாலுகலைகளின் பட்டியலை மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்த செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (A Comprehensive Etymological Dictionary of the Tamil Language) Vol. 1 , Part - 1 பக்கம் 545-548 வரையிலும் கண்டுள்ளபடி இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22.ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்).

வேறொரு பட்டியல்

1. பாட்டு (கீதம்);
2. இன்னியம் (வாத்தியம்);
3. நடம் (நிருத்தம்);
4. ஓவியம்;
5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7. பூவமளியமைக்கை;
8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
10. படுக்கையமைக்கை;
11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
12. நீர்வாரி யடிக்கை;
13. உள்வரி (வேடங்கொள்கை);
14. மாலைதொடுக்கை;
15. மாலை முதலியன் அணிகை;
16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
18. விரை கூட்டுகை;
19. அணிகலன் புனைகை;
20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
22.கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
24. தையல்வேலை;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27. விடுகதை (பிரேளிகை);
28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;
34. கதிரில் நூல் சுற்றுகை;
35. மரவேலை;
36. மனைநூல் (வாஸ்து வித்தை);
37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
40. தோட்டவேலை;
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45. மருமமொழி (ரகசிய பாஷை);
46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
49. பொறியமைக்கை;
50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
55. யாப்பறிவு;
56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
57. மாயக்கலை (சாலவித்தை);
58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
59. சூதாட்டம்;
60. சொக்கட்டான்;
61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63. படக்கலப் பயிற்சி;
64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).

Tuesday, April 3, 2012

பயணம்


   
   நாம் பயணம் செய்ய முடிவு செய்தால் போய் சேரும் இலக்கை முடிவு செய்த பிறகே பயணத்தை மேற்கொள்வோம். இலக்கை முடிவு செய்தால் மட்டும் போதாது பயணம் செய்ய இருக்கும் பாதையையும் அறிய வேண்டும். அப்படி பாதை தெரிய வில்லை என்றாலும் எவரிடமாவது வழி கேட்டாவது இலக்கை சென்று அடைந்திடுவோம்.

   நம் வாழ்க்கையும் ஒரு பயணம் தான், அதில் பயணிக்கும் நாம் பயணிகள். பயணிகளாகிய நம்மில் பலருக்கு  போய் சேரும் இலக்கை அறியாமல் பயணித்துக்கொண்டு இருக்கிறார்கள்.இலக்கே அறியாதவர்கள் எந்த பாதையில் பயணிப்பார்கள் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கும். சிலர் இலக்கை அறிந்தும் பாதை தெரியாமல் தவிக்கிறார்கள். இன்னும் சிலர் இலக்கை விரைவில் சென்றடைய சில குறுக்கு வழிகளை தேர்ந்தெடுத்து அதில் பயணிக்கிறார்கள். இவர்களில் இலக்கை சென்று அடைபவர்கள் மிக சொற்பம்.

   மரணம் என்பது நம் இலக்கு கிடையாது. நாம் மரணத்தை நோக்கி பயணிக்கவில்லை. நாம் நம் லட்சியமாகிய இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். முதலில் இலக்கை தேர்ந்தெடுங்கள், பிறகு அந்த இலக்கை சென்றடையும் பாதையை தேர்வு செய்யுங்கள் பாதை நேரான நேர்மையான பாதையாக இருக்கட்டும்.பின்னர் அப்பாதையில் பயணிங்கள் லட்சியத்தை கண்டிப்பாக சென்றடைவீர்கள். அப்படி நீங்கள் செல்லும் பாதை இலக்கை சென்றடைய வில்லை என்றால் வேறு ஒரு பாதையை தேர்ந்தெடுங்கள் ஆனால் தவறான பாதையை தேர்வு செய்யாதிர்கள்.

   இலக்கை அடையும் பாதை தொலைவாக இருந்தால், கரடு முரடாக இருந்தாலும், இடையில் எந்த இடையூறு வந்தாலும் மனம் தளராதிர்கள், மேற்கொண்டு பயணத்தை தொடருங்கள்.எல்லோராலும் இலக்கை எளிமையாக சென்றடைய முடியாது, சிலருக்கு உதவி தேவைப்படும், அவர்களை ஒருவர் வழி நடத்த வேண்டும். வழி நடத்துவராக, வழி காட்டியாக, உதவுபவராக நம் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் போன்றவர்கள் உள்ளனர் ஆனால் அதே போல் நம் பாதையை மாற்றி தவறான பாதையில் திருப்பிவிடுபவர்களும், இலக்கை அடைய விடாமல் செய்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களையும் தாண்டி லட்சியத்தை அடைபவன் தான் லட்சியவாதி. நாம் இலட்சியவாதிய ? பதில் உங்கள் மனதில்.

   லட்சியம், பாதை இவற்றை முடிவு செய்யுங்கள் பயணத்தை தொடருங்கள் வெற்றி உங்கள் பக்கம். நாம் அன்றாட செய்யும் பயணத்தை வாழ்க்கைக்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். லட்சியத்தை நோக்கி பயணம் தொடரட்டும், பயணிப்பவர்களுக்கு வெற்றி அடைய என் வாழ்த்துக்கள். பயனிக்காதவர்கள் முடிவெடுங்கள் இது உங்கள் வாழ்க்கை...