Thursday, April 12, 2012

கே எப் சி யில் நடக்கும் கொடூரம்


   கே எப் சி.KFC (Kentucky Fried Chicken) நாம் எல்லோராலும் நன்கு அறியப்படும் ஒரு பொழுதுபோக்கு உண்டிச்சாலை ஆகும். கசாப்பு கடைகளில் கோழி கறிகளை வாங்கி வீட்டில் சமைத்து உண்டோம் ஒரு காலத்தில், ஆனால் இப்போது சிக்கன் என்றாலே கே எப் சி என்றாகிவிட்டது. மேலும் அங்கு சுவையும் அருமையாக இருக்கிறதாம்.

   நாம் அந்த சுவையான சிக்கனை சுவைத்து உண்கிறோம், ஆனால் அந்த சுவையான சிக்கனை கே எப் சி எப்படி தயரிக்கிராகள் என்று யாருக்கும் தெரியாது. கசாப்பு கடைகளில் கூட கோழிகளை ஒரு வித மனிதாபிமானத்தோடு நடந்துக்கொள்வார்கள் ஆனால் கே எப் சி அப்படி ஒரு வார்த்தை இருக்கிறதா என்று கேட்ப்பார்கள் போல.

   எண்ணிக்கையின்றி சிறு சிறு கோழி குஞ்சிகளின் அலகுகளை இயந்திரத்தின் மூலம் உடைத்து விடுகிறார்கள் காரணம் அப்போதுதான் அவைகள் அதிகாமாக தீனிகளை உண்ணும்.

   பிறகு அக்கோழி குஞ்சிகளை எல்லாம் ஒரே இடத்தில் அடைகிறார்கள், அங்கு அவைகளால் சுற்றித்திரிய கூட முடியாது. மேலும் குஞ்சிகள் கொலு கொலுவென்று வலர எதோ ஒரு தீவனத்தை அவைகளுக்கு கொடுக்கிறார்கள். அத்தீவனத்தை உண்டு வளரும் குஞ்சிகள் தங்கள் இயல்பான இடையை விட அதிகமான இடையை கொண்ட கொலு கொலு கோழியாக வளருகின்றன. அந்த கொலு கொலு கோழிகள் தங்கள் அதிக இடை காரணத்தால் நடக்க கூட முடியாமல் கஷ்டப்படுகின்றன.

   முழுமையான வளர்ச்சி அடைந்த கோழிகளை தொழிற்சாலைக்குள் அவைகளை சுவையான சிக்கெனாக மாற்றுகிறார்கள். இங்கு இயந்திரத்தின் மூலம் ரோமத்தை பிரிக்கிறார்கள் கோழிகள் உயிருடன் இருக்கும் நிலையில்.  பிறகு சுழற்றும் மெல்லிய தகுடுகளின் மூலம் வரிசைகளில் வரும் கோழிகளை இரக்கமின்றி கொள்கிறார்கள். இத்தனை கொடுமைகலுக்கு பின்னரே அவற்றை சுவையான சிக்கன்களாக நமக்கு பறிமாறுகிறார்கள்.

   என் நண்பர்கள் மூலம் கே எப் சி யில் சிக்கன் சுவையாக இருக்குமென்று அறிந்து அதை உண்ண வேண்டும் என்ற  ஆசை இருந்தது ஆனால் கீழே இருக்கும் காட்சிகளை கண்ட பிறகு அந்த ஆசையானது அடியோடு அழிந்து விட்டது.






இன்னும் இது போன்ற பல காட்சிகள் நமக்கு தெரியாமல் இருக்கின்றன.

2 comments: