Wednesday, January 25, 2012

மனிதனின் உருவாக்கம்

                கல்லிற்ககு உருவம் கொடுத்தான் சிற்பி, அந்த உருவத்திற்க்கு உயிர் கொடுத்து தெய்வம் என்று பெயரிட்டு இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி வணங்கி வருகின்றோம் நாம். கடவுள், தெய்வம், சாமி இன்னும் எத்தனை பெயர்களோ ?  இருக்கின்றதோ, இல்லையோ என்று தெரியாமல் அதை பற்றி அறியாமல் பித்து பிடித்த நாம் வழிப்பட்டு வந்துக்கொண்டிருகின்றோம்.

               இவ்வுலகை படைத்தவன் கடவுள், அவ்வுலகில் மனிதர்களாகிய நம்மை படைத்தவனும் அவனே என்று கூறிச்சென்ற முன்னோர்களின் வாக்கை 21 ஆம் நூற்றாண்டிலும் நாம் நம்பி பின்பற்றி வருகிறோம். ஆனால் நம்முள் எவரேனும் அந்த கடவுளை படைத்தவன் யார்? அவன் எப்படி யாருக்கு பிறந்தான், தோன்றினான் என்ற கேள்வியை கேட்டது உண்ட இல்லை ஏனென்றால் நாம் தான் மூட நம்பிக்கைகளில் மூழ்கிக்கிடக்கின்றோமே.  அதிலிருந்து நீந்தி கரைக்கு வந்தவர்கள் தான் நார்தீகர்களாகிய தந்தை பெரியார் போன்றவர்கள். ஆனால் நாம் இன்னும் அதிலேயே தத்தளித்துக்கொண்டிருகின்றோம், சிலர் அழிந்தும் போய் இருக்கிறார்கள்.

                 நாம் ஏன் யோசிப்பது இல்லை, கடவுளும் நம்மை போன்ற உருவம் தானே, அவனுக்கும் உண்ண உணவு, உறங்க இடம் எல்லாம் தேவை படுமல்லவா. அப்படியானால் அவனுக்கு உணவு எங்கிருந்து கிடைக்கின்றது, மேலோகத்தில் நம் விவசாயிகள் வானத்தில் ஏர் உழுது பயிர் வைத்து நாற்று நட்டு அவனுக்கு உரியதை விளைய வைத்து கொடுக்கின்றார்களா, இது சாத்தியமானத மேலோகத்தில் விளை நிலங்கள் தான் இருக்கின்றதா இல்லை எதுவும் இல்லை.  பூமியில் பயிர் வைத்தவனே வெயில் மழையை  வேண்டிருக்கிறான் மேலோகத்தில் சொல்லவா வேண்டும். அப்படி அவன் உறங்க வேண்டுமானால் ஒரு அரண்மனை இல்லை ஒரு வீடாவது வேண்டுமல்லவா. அவற்றை கட்ட பொருட்களை எங்கிருந்து பெறுவான் அல்லது கட்டிட கலை வல்லுனர்கள் தான் இருகிறார்களா இல்லை. கடவுள் என்றதால் பொருட்களையும் வல்லுனர்களையும் பூமியிலிருந்து இறக்குமதி செய்வானா? அவன் தான் கடவுள் ஆயிற்றே எதுவும் செய்ய சாத்தியம் தானே. இவை எல்லாம் நம்பக்கூடியவை தானா? ஆனால் நாம் நம்பிக்கொண்டு தான் இருக்கின்றோம் அவனுக்கு சக்தி இருக்கு என்று ஆனால் எதுவும் உண்மை இல்லை எல்லாம் பித்தலாட்டத்தனம். நம்மிடையே  கற்பனைத்திறன் மிகவும் அதிகமாக உள்ளது ஆனால் நாம் அதை வேறு நற்காரியங்களுக்கு பயன்படுத்துவது இல்லை. இக்கேள்விகள் நம்முள் ஏன் எழவில்லை நாம் ஏன் இதை பற்றி சிந்திப்பது இல்லை. மக்களே கடவுள் என்று ஒன்று இல்லை, மேலோகம் என்று ஒன்று இல்லை, சொர்க்கம், நகரம் என்று எதுவும் இல்லை எல்லாம் நாமே உருவக படுத்திக்கொண்டது.

              "படைப்புகளை வணங்காதே, படைத்தவனை வணங்கு..."

                  நாம் நம் தாய் தந்தையால் இவ்வுலகில் படைக்கப்பட்டோம் அவர்கள் தான் நம் கடவுள் மற்றவை எல்லாம் ஒரு உருவாக்கம். நாம் பயணம் செய்யும் பேருந்து, ரயில், விமானம் போன்ற ஊர்திகளை கண்டு பிடித்தவர் மனிதர்கள், நாம் அன்றாட பயன் படுத்தும் எல்லாப்பொருட்களையும் கண்டறிந்தவர்கள் மனிதர்களே பிரம்ம, விஷ்ணு, சிவன், இயேசு, அல்லா போன்றவைகள் கிடையாது.

             "ஆகாஷ், அச்யுதாஹ், ஆதிமூர்த்தி, ஆதிதி, ஆதித்யா, அக்னி, அம்மவரு, அனலா, அனிலா, அனுமதி, அனுராதா, அப், அபம்னபட், ஆரண்யணி, அரவான், அர்த்தநாரி, அர்தா, அர்ஜுனா, அருந்ததி, அர்யுமான், அச்லேசா, அசுரா, அஸ்வயுஜாஉ, அஸ்வினி, ஐயப்பன், அய்யனார், அய்யா
வைகுண்டர். "

                  "பகலா, பகலாமுக்ஹி, பஹுச்சரா மாதா, பலராமா, பானகா முந்தி, பத்ரா, பத்ரகாளி, பாகா, பைரவா, பரணி, பாரதி, பவானி, பீஷ்மா, பூமிதேவி, பூமியா, புத்தமாதா, புவனேஸ்வரி, பிரம்மா, பிரமன், பிராமணி, ப்ரிஹச்பதி, புத்ஹா, புத்தா, புத்தி, புத்தி பல்லின், பாலாஜி, பீரலிங்கேச்வர."

                 "சாமுந்தா, சாமுந்தி, சந்திரா, காதன், ச்ஹின்னமச்டா, சித்திரகுப்தா, தக்க்ஷ, தக்ஷயாணி, தனு, டட்டற்றேயா, தேவா, தேவி, தேவ்நாராயன், தணோன்டறி, தாரா, தர்மா, தர்மா சாஸ்தா, தாத்ரி, துமாவதி, துர்க்கா, திரௌபதி, எசக்கி, கணேஷா, கங்கா, கருடா, காயத்த்ரி, கன்ஷ்யாம், குசைஞ்சி, ஹனுமான், ஹரி, ஹ்ரிஷிகேஷ், இந்திரா, இந்த்ராணி, இன்டிலய்யப்பன், இஷான, இஷ்வரா, ஜகத்தத்ரி, ஜ்யோதிபா, ஜகன்னாத், சுமதி, ஜாஸ்நாத்சி, ஜெய்."   

               "கடுதா சுவாமி, கைவாழ், கலா, காளி, காமா, கமலாம்மிகா, கார்த்திகேயா, கிரட்ட மாதா, கருப்ப சுவாமி, கஷ்யுபா, க்ஹடுஷ்யாம்ஜி, கிரட்ட மூர்த்தி, கிருஷ்ணா,குபேரா, கண்டோபா, கத்யணினி, கண்ணகி, கனகஷி, லக்ஷ்மி, லலிதா, லக்ஷ்மன், மதுரை வீரன், மகாவித்யா, மஹா சிவா, மாறி அம்மன், மார்கண்டேயா, மற்றிகாஸ், மீனாக்க்ஷி, ம்ஹஅசொப, வீர ம்ஹஅச்கோப, மித்ரா, மோகினி, முத்யாலம்மன், மகாலஷ, முக்யப்றன, மூகாம்பிக, முனீஸ்வர."

                "நாக தேவதா, நாக ராஜ, நாக யக்ஷி , நைனா தேவி, நல்லச்ச்சன், நந்தி, நாரதா, நரஷிமா, நாராயணா, நடராஜ, நிர்றித், நிர்ர்ட, நூகாம்பிகா, பரசுராம, பரசிவ, பர்ஜன்ய, பார்வதி, பசுபதி, ப்ரித்வி, புஷன், புருஷா, ராத, ராம, ராமநதி, ரங்கநாத், ரதி, ராத்ரி, ரவி, ர்புஸ், ரேணுகா, ரேவண்ட, ரோகினி, ருத்ர, சாமலேஸ்வரி, சந்தோசி மாதா, சரஸ்வதி, சரண்யா, சதி, ஷக்தி, சாவித்திரி, சாவித்ர, சேல்ஸ,ஷக்தி பீதாஸ், ஷண்டதுர்கா, சிவா, சீதா, சாய் பாபா, சகண்ட, சோம, சுப்ரமணிய, சூர்யா, சோஹா, ச்வாமினரயணன், ஸ்ரீராமன்."
           
                "தாரா, தேஜாஜி, திருபதி திம்மப்பா, திரிபுரா சுந்தரி, த்வஷ்ற்றி, உமா, ஊர்வஷி, உஷாஸ், உக்ராடர, வாரஹா, வருணா, வாசு, வாயு, வீரபத்ரா, வீர ம்ஹஅச்கோப, வெங்கடேஸ்வர, வேட்டக்கொரு, மாகான், விஷ்ணு, வித்தோபா, விஷ்வக்சேன, விஸ்வகார்மா, விவஸ்வத், வள்ளி, யக்க்ஷ, யக்க்ஷி, யாமா, யாமி, எல்லம்மா, யுதிச்திர."

             மேலே கூறப்பட்டுல்ல பெயர்கள் அனைத்தும் நம் நாட்டில் உருவக படுத்தப்பட்டுல்ல கடவுள்களின் பெயர்களே ஆகும். ஒரு கேள்வி ஏன் இத்தனை கடவுள்களும் நம் நாட்டை தவிர வேறு எந்த நாட்டிலும் தோன்ற வில்லை, ஏன் பிரம்மன் ஆஸ்திரேலியாவில் அவதாரம் எடுக்க வில்லை, ஏன் அனைவரும் இந்நாட்டிலேயே குப்பை கொட்டுகிறார்கள் ஏனென்றால் இவர்களை உருவாக்கியது நாம்.

               இத்தனை கடவுள்கள் இருந்தாலும் ஏன் நம் நாட்டில் இன்னும் பட்டினி சாவுகள் இருக்கின்றன, ஏன் நம் நாடு வறுமையாக உள்ளது, ஏன் தீவிரவாதம் தலையோங்கி நிற்கிறது, ஏன் ஊழல் நடக்கிறது, ஏன் கொலை, கொள்ளை போன்றவைகள் நடக்கிறது, ஏன் கோவிலில் நடக்கும் கலவையே கடவுள் கண்டுபிடிக்காமல் காவல் துறை கண்டுபிடிக்கிறது, ஏன் ஜாதி, மதம், இனம் வெறி இருக்கிறது, ஏன் மக்களிடையே, நாடுகள் இடையே ஒற்றுமை இல்லாமல் சண்டை இடுகிறார்கள். ஆயிரம் கணக்கில கடவுள்கள் இருக்கிறார்களே நம் நாட்டில் ஒவ்வொருவர் ஒரு ஒரு தீங்கினை சரி செய்தலும் நம் நாடு செழுமையாக இருக்குமே ஏன் அதை கடவுள்கள் செய்யாமல் இருக்கிறார்கள் ஏனென்றால் கடவுள் என்று எதுவும் இல்லை இருந்தால் தான் நம் நாடு செழுமையுடன் இருக்குமே.

               மக்களே இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணி ஏன் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வுலகில் வாழ்வது நாம், இவ்வுலகம் நமற்க்கு சொந்தமானவை, இருக்கும் மனிதர்கள் நம் இனத்தவர்கள் பிறகு ஏன் நம்மிடையே வேற்றுமை, ஒற்றுமையாக இருப்போம். நமக்கு துன்ப காலத்தில் உதவும் மனிதன் தான் நமக்கு கடவுள். 

             நாம் தான் இன்னொரு உயிரை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்த போகிறோம் அவர்களுக்கு இவ்வுலகை மாசு படுத்தாமல் கொடுக்க வேண்டும். அவர்களும் நம்மை போல் வாழ வேண்டும்.  நாம் வாழும் பூமியை சொர்கமாக மாற்றுவோம். பசுமை செழிக்கட்டும் நம் பூமியில் ஒன்றாக பாடுபடுவோம்....

1 comment:

  1. idhu unmai ellarkum theriyanumna nama tha eduthu solanu.........ana yaru kekka matanga namala avanga paithiyamnu soluvanga.........ana avanga tha paithiyam(mooda nabikai paithiyam)............

    ReplyDelete