Monday, January 30, 2012

அலைபேசி


பல பேர்களில் என்னை  கவர்ந்தவள்
கண்டேன் அவளை கண்களால்
ரசித்தேன் அவளை இதயத்தால்
அடைந்தேன் அவளை மனதால்


பகல்தோறும் இரவுதோறும் நாள்தோறும்
பேசினேன்.

கொடுத்தேன் தினம் நூறு 
முத்தங்கள்.

கொடுத்தேன் தினமும் அவளுக்கு
உயிர்.

விடிந்ததும் தேடினேன் அவளை
என் கட்டிலில்.

பிரிந்தது இல்லை அவளை
ஒரு நிமிடம் கூட.

அவளுக்காக செலவு செய்தேன்
அளவில்லாமல்.


ஒரு நாள்

உபயோகமற்று போனாள் என் காதலிப்போல்
அன்றுதான் உணர்ந்தேன் அவள் பெண்ணென்று
காரணம் என்னிடம் பணம் இல்லாதது
புரிந்து கொண்டேன் காதலியின் மறுருபம்
அலைபேசி என்று............

1 comment: